ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேரதல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி (3)
இந்த கிராமம் மீஞ்சூருக்கு அருகில் உள்ள புராதனமான பாடல் பெற்ற சிவாலயம் உள்ள ஊர்.
ஆலயத்தை ஒட்டியே பள்ளி வளாகம். நல்ல அமைதியான சூழல். பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும் வெளி வாயில் கதவை மூடி விட்டு வரிசையில் நிற்பவர்களுக்கு token வழங்கி வாக்களிப்பை நிறைவு செய்வோம்.
இந்த பள்ளியில் அப்படி ஒரு gate இல்லை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. பள்ளியின் தாளாளர் இரவு உணவு, தேர்தல் நாள் அன்று காலை சிற்றுண்டி மதிய உணவு மற்றும் இரவுச் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்.
சாவடியிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அவர் இல்லத்தில் உள்ள குளியல், கழிப்பறை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தார். மொத்தம் இரண்டு சாவடிகள் இரண்டும் 15’×10’ அளவிலான அடுத்தடுத்த அறைகள்.
என்னுடன் பணியாற்ற வந்த PO1 மற்றும் PO3 இருவரும் மகளிர். PO2 ஆண். நானும் அவரும் எங்கள் சாவடியில் தங்கவும், இரண்டு மகளிரும் பக்கத்துச் சாவடி மகளிருடன் ஒன்றாகத் தங்கவும் முடிவாயிற்று. இதற்கிடையில் BSNL அலுவலர்கள் online voting transmission க்கு modem மற்றும் camera பொருத்தினர். மிகவும் பதட்டமான சாவடியாம்.
குறுவட்ட அலுவலர் தேரதல் தொடர்பான பொருட்களை அளித்து விட்டு சரிபாரத்து வைக்கச் சொல்லிப் போனார்.
முதலில் control மற்றும் Ballot unit களை சரிபார்த்து அப்புறம் இதர பொருட்களை சரிபார்த்து முடிக்க இரவு 7 மணி. அப்புறம் polling booth தயார் செய்தல், போஸ்டர் ஓட்டுதல் எல்லாம் நல்லபடி நடந்தேறியது. PO1,2,3 எல்லாம் மிகவும் சுறுசுறுப்பு, நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். அவர்களில் PO3 புதியவர் எனவே கூடுதலாக கற்பதில் ஆர்வமாயிருந்தார்.
இரவு 8 மணிக்கு மணக்க மணக்க பூரி மசாலா வந்து சேர்ந்தது. ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஊர் எல்லாக் கட்சி பிரமுகர்களும் வந்தனர். வணக்கம் சொல்லி வரவேற்றோம். அவர்கள் நாங்கள் வெவ்வேறு கட்சியினர்தான், எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இருந்தாலும் நீங்கள் எங்கள் ஊரில் பணி செய்ய வந்தவர்கள். உங்கள் பணியில் எந்தக் குறுக்கீடும் இராது.
அதேபோல் உங்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்போம் என்று சொல்லிச் சென்றனர். தங்கள் ஊரின் நற் பெயரை காப்பாற்ற அவர்கள் முனைப்பாக இருப்பது சந்தோஷமாக இருந்தது.
இரவு 10 மணிக்கு Zonal officer திரும்ப வந்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வாழ்த்துச் சொல்லி கிளம்பிப் போனார்.
இரவு 11 மணிக்கு பார்வையாளர்கள் வந்து சென்றனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை காவல் துறையினர் வந்தபடி இருந்தனர்.
எங்கள் சாவடிகளின் காவலர்கள் , எப்போதும் இல்லாமல் இளைஞர்கள். மயக்கமே வந்து விட்டது. பொதுவாக ஒரு ஊர்க்காவல் படை அல்லது வயதான முன்னாள் இராணுவ வீரர்தான் இருப்பர். இந்த முறை வட இந்திய இளைய காவலர்கள் இயந்திர துப்பாக்கியுடன். மிகவும் மகிழச்சியாக இருந்தது.
இடையிடையே கட்டுப்பாட்டு அறைக்கு SMS அனுப்புதல் என்று பரபரப்பாக தூக்கம் இன்றி இரவு கடந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு ஒவ்வொருவராக காலைக்கடன்களை முடித்து 5 மணிக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயார் ஆகிவிட்டோம்.
தொடரும் (4)
பகுதி (3)
இந்த கிராமம் மீஞ்சூருக்கு அருகில் உள்ள புராதனமான பாடல் பெற்ற சிவாலயம் உள்ள ஊர்.
ஆலயத்தை ஒட்டியே பள்ளி வளாகம். நல்ல அமைதியான சூழல். பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும் வெளி வாயில் கதவை மூடி விட்டு வரிசையில் நிற்பவர்களுக்கு token வழங்கி வாக்களிப்பை நிறைவு செய்வோம்.
இந்த பள்ளியில் அப்படி ஒரு gate இல்லை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. பள்ளியின் தாளாளர் இரவு உணவு, தேர்தல் நாள் அன்று காலை சிற்றுண்டி மதிய உணவு மற்றும் இரவுச் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்.
சாவடியிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அவர் இல்லத்தில் உள்ள குளியல், கழிப்பறை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தார். மொத்தம் இரண்டு சாவடிகள் இரண்டும் 15’×10’ அளவிலான அடுத்தடுத்த அறைகள்.
என்னுடன் பணியாற்ற வந்த PO1 மற்றும் PO3 இருவரும் மகளிர். PO2 ஆண். நானும் அவரும் எங்கள் சாவடியில் தங்கவும், இரண்டு மகளிரும் பக்கத்துச் சாவடி மகளிருடன் ஒன்றாகத் தங்கவும் முடிவாயிற்று. இதற்கிடையில் BSNL அலுவலர்கள் online voting transmission க்கு modem மற்றும் camera பொருத்தினர். மிகவும் பதட்டமான சாவடியாம்.
குறுவட்ட அலுவலர் தேரதல் தொடர்பான பொருட்களை அளித்து விட்டு சரிபாரத்து வைக்கச் சொல்லிப் போனார்.
முதலில் control மற்றும் Ballot unit களை சரிபார்த்து அப்புறம் இதர பொருட்களை சரிபார்த்து முடிக்க இரவு 7 மணி. அப்புறம் polling booth தயார் செய்தல், போஸ்டர் ஓட்டுதல் எல்லாம் நல்லபடி நடந்தேறியது. PO1,2,3 எல்லாம் மிகவும் சுறுசுறுப்பு, நல்ல ஒத்துழைப்புத் தந்தனர். அவர்களில் PO3 புதியவர் எனவே கூடுதலாக கற்பதில் ஆர்வமாயிருந்தார்.
இரவு 8 மணிக்கு மணக்க மணக்க பூரி மசாலா வந்து சேர்ந்தது. ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஊர் எல்லாக் கட்சி பிரமுகர்களும் வந்தனர். வணக்கம் சொல்லி வரவேற்றோம். அவர்கள் நாங்கள் வெவ்வேறு கட்சியினர்தான், எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இருந்தாலும் நீங்கள் எங்கள் ஊரில் பணி செய்ய வந்தவர்கள். உங்கள் பணியில் எந்தக் குறுக்கீடும் இராது.
அதேபோல் உங்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்போம் என்று சொல்லிச் சென்றனர். தங்கள் ஊரின் நற் பெயரை காப்பாற்ற அவர்கள் முனைப்பாக இருப்பது சந்தோஷமாக இருந்தது.
இரவு 10 மணிக்கு Zonal officer திரும்ப வந்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வாழ்த்துச் சொல்லி கிளம்பிப் போனார்.
இரவு 11 மணிக்கு பார்வையாளர்கள் வந்து சென்றனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை காவல் துறையினர் வந்தபடி இருந்தனர்.
எங்கள் சாவடிகளின் காவலர்கள் , எப்போதும் இல்லாமல் இளைஞர்கள். மயக்கமே வந்து விட்டது. பொதுவாக ஒரு ஊர்க்காவல் படை அல்லது வயதான முன்னாள் இராணுவ வீரர்தான் இருப்பர். இந்த முறை வட இந்திய இளைய காவலர்கள் இயந்திர துப்பாக்கியுடன். மிகவும் மகிழச்சியாக இருந்தது.
இடையிடையே கட்டுப்பாட்டு அறைக்கு SMS அனுப்புதல் என்று பரபரப்பாக தூக்கம் இன்றி இரவு கடந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு ஒவ்வொருவராக காலைக்கடன்களை முடித்து 5 மணிக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயார் ஆகிவிட்டோம்.
தொடரும் (4)
No comments:
Post a Comment