பேருந்து அதிரும் தாலாட்டு ஓசை.
மெலிந்து கேட்கும் எப்.எம் வானொலி இசை.
நெரிசலில் சிக்கிய கைக்குழந்தையின் அழுகை.
நடத்துனரின், "டிக்கெட், டிக்கெட்" குரல்.
நம் தோளில் தூங்கி தலை வைத்துத் தூங்கும் பயணியின் மெலிதான குறட்டை.
டோல் கேட்களில் விற்கும் வெள்ளரிப் பிஞ்சு,வேர்க்கடலை இன்ன பிற.
சாலையோர சத்திரத்தில் கீச்சுக் குரலில் கேட்டு மறையும் திரைப்பாடல்.
சப்தமாக கைபேசியில் மனைவியிடம் பேசும் குடும்பஸ்தர்.
நிமிடத்திற்கு ஒரு முறை “இரண்டு ரூபாய் பாக்கிச் சில்லறை தரணும்” நினைப்பூட்டும் முதியவர்.
கண்ணால் மொழி பேசும் மௌனக் காதலர்கள்.
காதில் ஒலிப்பான் மாட்டி உலகம் மறந்த இசை ரசிகர்கள்.
கைபேசியில் ‘சாட்’டியபடி இளைய தலைமுறையினர்.
செய்தித்தாளை விரித்து வைத்து படபடக்கும் காற்றிலும் செய்தி வாசிக்கும் அலுவலர்கள்.
இருவர் இருக்கையில் அருகருகே பயந்தபடி அமர்ந்திருந்த காதல் சோடி.
காலைப் பரப்பி அடுத்தவர் உட்கார இடமில்லாத மாதிரி பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியசாலிகள்.
என்று பேருந்துப் பயணத்தில் ரசிக்கக் கூடிய அம்சங்களுடன் இலவச இணைப்பாக.
போதையில் ‘மண் பானைக் காத்து பானை உடஞ்சா எங்கே போவும்’ என்று பானைத்தத்துவ மழை பொழிந்த திம்மராஜபுரம் ராசப்பன்.
அவன் அருகே இருக்கை வாய்க்கப் பெற்ற எனக்கு
ஆண்டவனின் அருட்கருணை அந்தப் பேருந்துப் பயணம்.
மெலிந்து கேட்கும் எப்.எம் வானொலி இசை.
நெரிசலில் சிக்கிய கைக்குழந்தையின் அழுகை.
நடத்துனரின், "டிக்கெட், டிக்கெட்" குரல்.
நம் தோளில் தூங்கி தலை வைத்துத் தூங்கும் பயணியின் மெலிதான குறட்டை.
டோல் கேட்களில் விற்கும் வெள்ளரிப் பிஞ்சு,வேர்க்கடலை இன்ன பிற.
சாலையோர சத்திரத்தில் கீச்சுக் குரலில் கேட்டு மறையும் திரைப்பாடல்.
சப்தமாக கைபேசியில் மனைவியிடம் பேசும் குடும்பஸ்தர்.
நிமிடத்திற்கு ஒரு முறை “இரண்டு ரூபாய் பாக்கிச் சில்லறை தரணும்” நினைப்பூட்டும் முதியவர்.
கண்ணால் மொழி பேசும் மௌனக் காதலர்கள்.
காதில் ஒலிப்பான் மாட்டி உலகம் மறந்த இசை ரசிகர்கள்.
கைபேசியில் ‘சாட்’டியபடி இளைய தலைமுறையினர்.
செய்தித்தாளை விரித்து வைத்து படபடக்கும் காற்றிலும் செய்தி வாசிக்கும் அலுவலர்கள்.
இருவர் இருக்கையில் அருகருகே பயந்தபடி அமர்ந்திருந்த காதல் சோடி.
காலைப் பரப்பி அடுத்தவர் உட்கார இடமில்லாத மாதிரி பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியசாலிகள்.
என்று பேருந்துப் பயணத்தில் ரசிக்கக் கூடிய அம்சங்களுடன் இலவச இணைப்பாக.
போதையில் ‘மண் பானைக் காத்து பானை உடஞ்சா எங்கே போவும்’ என்று பானைத்தத்துவ மழை பொழிந்த திம்மராஜபுரம் ராசப்பன்.
அவன் அருகே இருக்கை வாய்க்கப் பெற்ற எனக்கு
ஆண்டவனின் அருட்கருணை அந்தப் பேருந்துப் பயணம்.

No comments:
Post a Comment