வேட்பாளர் வரும் முன் "வந்து கொண்டிருக்கிறார்", முழக்கம்
ஒலி பெருக்கியில்
ரத,கஜ, துரத பதாதி நால்வகைப் படை இல்லை
நாற்பது இருசக்கர
வாகனப் படை கட்சிக் கொடிகள் படபடக்க
வெறிக் கூச்சலிட்டபடி
வெறிக் கூச்சலிட்டபடி
நாற் சக்கர சரக்குந்துகளில்டண்டணக்கா பேண்ட் செட்
ஸ்கார்ப்பியோ கார்களில் கட்சி முக்கியப் பிரமுகர்கள்
அடுத்து வரும் சரக்குந்தில் ஸ்பாட் விளக்கு ஒளி விளக்குகள்
ஐந்தாறு கட்சிக் கொடி நிறத்தில் துவர்த்தணிந்த வெள்ளுடைப் பிரமுகர்கள்
நடுவில் முண்டா பனியன் துல்லியமாகத் தெரியும் மெல்லிய வெள்ளை மல் சட்டையில்
இலக்கின்றி சிரித்து, கைகூப்பியபடி வேட்பாளர்
"ஏ ஆயா ஏ , பெரிசு ஓரம் போ " ,யோவ் நின்னு போயா அண்ணன் ஓட்டு கேட்டு வராரில்ல" என்ற தொண்டர்கள்
முதலும் கடைசியுமாக தொகுதி மக்களுக்கு காட்சியளிக்க வந்து கொண்டு இருந்தனர்
தேர்தலில் பங்கு கொண்ட சனநாயகத் தெய்வங்கள்.
தெருவில் வந்து கற்பூரம் ஏற்றி தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் மரியாதை
செய்து அருள் பெறுங்கள் மக்களே.
இருட்டிய பின் இரவில் வீடுதேடி வரும் இலட்சுமி கடாட்சம்
இன்னாட்டு மன்னர் சடாரி வாங்கி நாளை மறுநாள் மை பிரசாதம் இட்டுக்கொண்டு இரவு டாஸ்மாக் சரக்கில் தீர்த்தவாரி
அப்புறம் வழக்கம் போல் ஐந்து வருடங்களுக்குப் புலம்பித் தீர்க்கலாம்.
இன்னும் விடியவில்லை.

No comments:
Post a Comment