ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்.
பகுதி (2)
போன முறை சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாள் 13.04.2011.
12.04.2011 காலை 8 மணிக்கு பொன்னேரி L.N.G அரசினர் கல்லூரிக்கு வரச் சொல்லி கைபேசியில் தகவல் வந்திருந்தது.
காலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு 6.30க்கு கிளம்பி பேருந்து நிறுத்தம் வரவும் செங்குன்றம்(Redhills) செல்லும் 114 எண் பேருந்து காலியாக வந்தது.
செங்குன்றத்திலிருந்து அடிக்கடி பொன்னேரிக்கு பேருந்து உண்டென்பதால் அதில் ஏறி செங்குன்றம் வந்தாயிற்று.
மணி 7, எனவே சிற்றுண்டி சாப்பிட அவகாசமில்லை. இட்லி, பொங்கல் வடை பார்சல் வாங்கிக் கொண்டு பொன்னேரிக்கு வண்டி ஏறியாச்சு.
டாண்ணு 7.50க்கு சின்ன பெட்டியுடன் சங்கே முழங்கு எம்.ஜி.ஆர் மாதிரி பொன்னேரி பேருந்து நிலையத்தில் இறங்கினேன்.
வெளியே வந்து ஆட்டோ கேட்டால் 50 ரூபாய்(1கி.மீ தூரம்) என்று பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, “அண்ணே வாங்க. காலேஜிற்குத்தானே, நான் கொண்டு விடுகிறேன்” என்ற குரல் வந்த திசையில் நம்ம பள்ளித் துணை ஆய்வாளர் திரு. திருவரசு தம்பி புன்னகையுடன்.
எட்டு மணிக்கு காலேஜ் வந்தால் வழக்கம் போல ஒரே களேபரம். அணி எண்(Team Number) படி ஒவ்வோர் அறையிலும் கிட்டத்தட்ட 100 பேர். இயந்திரத் துப்பாக்கி ஏந்திய மத்திய காவல் துறையினர் மயம்.
என் அணி எண் கூப்பிடப்படவில்லை. சிற்றுண்டியை முடித்து கை கழவி சற்று ஓய்வாக ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். 11 மணி வாக்கில் எல்லா அணி எண்ணும் படிக்கப்பட்டு விட்டது.
என் அணி எண் படிக்கப்படவில்லை. அணி எண் படித்து முடித்திருந்த அலுவலரிடம் என் அணி எண் சொல்லி இது வரை அழைக்கப்படவில்லை என்றேன். அவர் வழக்கம் போல “ அதெல்லாம் தெரியாது சார். ரிட்டனிங் ஆபிசர் கிட்ட கேளுங்க” என்றார்.
மனதிற்குள் சிரித்தபடி மீண்டும் அரசமரத்தடிக்கே வந்தேன். மணி12 ஆகிவிட்டது. அய்யோபாவமாக இருந்த ஒரு ஆசாமி மைக்கில் பெயர் கூப்பிடாதவங்க எல்லாம் அறை எண் **** ல் இருங்கள் என்றார்.
நல்லவேளையாக அந்த அறை நம்ம போதி மரத்திற்கு அருகிலேயே இருந்தது. அங்கே உள்ளே போனதும் நம் ஆணையை பார்த்த அந்த அலுவலர், “நீங்கள் reserve sir.லஞ்ச் சாப்பிட்டு ஒன்னரை மணிக்கு வந்து இங்கேயே இருங்க position confirm பண்ணிட்டு கூப்பிடுவோம் என்றார்.
அதற்குள் போதி மரத்தில் உட்கார்ந்த நேரமோ என்னவோ ஞானம் வந்து விட்டது. என்னுடன் இருந்த ஒரு PWD அலுவலர் ஒருவர், “சார் reserve க்கு duty இல்லாட்டாலும் remuneration உண்டு” என்று அல்ப சந்தோஷத்தில் இருந்தார்.
ஆனால் எனக்குத் தெரியும் அதில் உள்ள சிக்கல். திடீரென அதிகாலை 3 மணிக்கு எழுப்பி ஏதாவது ஆள் இல்லாத வாக்குச்சாவடிக்கு police vanல் ஏற்றிஅனுப்புவார்கள். அங்கே போனால் 3 மணி நேரமும் வேலை ஆளைத் தின்று விடும்.
அதை விட இப்போதே பணியிடம் கிடைப்பது நல்லது. ஆகவே யார் வந்து சொன்னாலும் முதலில் போவது நல்லது என்ற என் வார்த்தைகளை அந்த PWD அலுவலர் ஏற்கவில்லை.
அதெல்லாம் “சமாளிச்சிக்கலாம் சார்” என்றவருக்கு அதுதான் முதல் தேர்தல் பணியாம்.
“சார் polling station -------க்கு Presiding officer வரவில்லை” என்ற குரல் என் காதில் தேனாகப் பாய்ந்தது.(Naan அம்மா கவனிக்க)
என்னுடன் reserve duty யில் 10 நபர்கள் இருந்தனர். எல்லோரும் காது கேட்காத மாதிரி நழவினர்.
நான் தயங்காமல் எனக்குப் போடச் சொல்லி திருத்திய ஆணை போட்டு வாங்கிக் கொண்டேன். மற்றவர்கள் என் முதுகிற்குப் பின்னால் நக்கலாகச் சிரிப்பதை உணர முடிந்தது.
ஆணை வாங்கும் போது பிறபகல் மணி 3.00.
என் குழு உறுப்பினர்கள் எல்லோரையும் சந்தித்து குறு வட்ட அலுவலரிடம் (Zonal officer) SIM card வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
பொன்னேரியிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள சிற்றூர். ஷேர் ஆட்டோ பிடித்து வசதியாக வந்து சேர்ந்தேன்.
அது என்ன SIM card என்றால் வாக்குச் சாவடி தலைமை அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளத் தரப்படும் அரவான் SIM. வாக்குப் பதிவு இயந்திரம் இன்ன பிற சாதனங்களை ஒப்படைத்ததும் மரித்துவிடும் அந்த SIM card.
தேர்தல் நடைபெறும் போது கட்டுப்பாட்டு அறையுடன் அனைத்து விபரங்களையும் பரிமாற இந்த சிம் தான்.
……..தொடரும்
பகுதி (2)
போன முறை சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாள் 13.04.2011.
12.04.2011 காலை 8 மணிக்கு பொன்னேரி L.N.G அரசினர் கல்லூரிக்கு வரச் சொல்லி கைபேசியில் தகவல் வந்திருந்தது.
காலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு 6.30க்கு கிளம்பி பேருந்து நிறுத்தம் வரவும் செங்குன்றம்(Redhills) செல்லும் 114 எண் பேருந்து காலியாக வந்தது.
செங்குன்றத்திலிருந்து அடிக்கடி பொன்னேரிக்கு பேருந்து உண்டென்பதால் அதில் ஏறி செங்குன்றம் வந்தாயிற்று.
மணி 7, எனவே சிற்றுண்டி சாப்பிட அவகாசமில்லை. இட்லி, பொங்கல் வடை பார்சல் வாங்கிக் கொண்டு பொன்னேரிக்கு வண்டி ஏறியாச்சு.
டாண்ணு 7.50க்கு சின்ன பெட்டியுடன் சங்கே முழங்கு எம்.ஜி.ஆர் மாதிரி பொன்னேரி பேருந்து நிலையத்தில் இறங்கினேன்.
வெளியே வந்து ஆட்டோ கேட்டால் 50 ரூபாய்(1கி.மீ தூரம்) என்று பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது, “அண்ணே வாங்க. காலேஜிற்குத்தானே, நான் கொண்டு விடுகிறேன்” என்ற குரல் வந்த திசையில் நம்ம பள்ளித் துணை ஆய்வாளர் திரு. திருவரசு தம்பி புன்னகையுடன்.
எட்டு மணிக்கு காலேஜ் வந்தால் வழக்கம் போல ஒரே களேபரம். அணி எண்(Team Number) படி ஒவ்வோர் அறையிலும் கிட்டத்தட்ட 100 பேர். இயந்திரத் துப்பாக்கி ஏந்திய மத்திய காவல் துறையினர் மயம்.
என் அணி எண் கூப்பிடப்படவில்லை. சிற்றுண்டியை முடித்து கை கழவி சற்று ஓய்வாக ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். 11 மணி வாக்கில் எல்லா அணி எண்ணும் படிக்கப்பட்டு விட்டது.
என் அணி எண் படிக்கப்படவில்லை. அணி எண் படித்து முடித்திருந்த அலுவலரிடம் என் அணி எண் சொல்லி இது வரை அழைக்கப்படவில்லை என்றேன். அவர் வழக்கம் போல “ அதெல்லாம் தெரியாது சார். ரிட்டனிங் ஆபிசர் கிட்ட கேளுங்க” என்றார்.
மனதிற்குள் சிரித்தபடி மீண்டும் அரசமரத்தடிக்கே வந்தேன். மணி12 ஆகிவிட்டது. அய்யோபாவமாக இருந்த ஒரு ஆசாமி மைக்கில் பெயர் கூப்பிடாதவங்க எல்லாம் அறை எண் **** ல் இருங்கள் என்றார்.
நல்லவேளையாக அந்த அறை நம்ம போதி மரத்திற்கு அருகிலேயே இருந்தது. அங்கே உள்ளே போனதும் நம் ஆணையை பார்த்த அந்த அலுவலர், “நீங்கள் reserve sir.லஞ்ச் சாப்பிட்டு ஒன்னரை மணிக்கு வந்து இங்கேயே இருங்க position confirm பண்ணிட்டு கூப்பிடுவோம் என்றார்.
அதற்குள் போதி மரத்தில் உட்கார்ந்த நேரமோ என்னவோ ஞானம் வந்து விட்டது. என்னுடன் இருந்த ஒரு PWD அலுவலர் ஒருவர், “சார் reserve க்கு duty இல்லாட்டாலும் remuneration உண்டு” என்று அல்ப சந்தோஷத்தில் இருந்தார்.
ஆனால் எனக்குத் தெரியும் அதில் உள்ள சிக்கல். திடீரென அதிகாலை 3 மணிக்கு எழுப்பி ஏதாவது ஆள் இல்லாத வாக்குச்சாவடிக்கு police vanல் ஏற்றிஅனுப்புவார்கள். அங்கே போனால் 3 மணி நேரமும் வேலை ஆளைத் தின்று விடும்.
அதை விட இப்போதே பணியிடம் கிடைப்பது நல்லது. ஆகவே யார் வந்து சொன்னாலும் முதலில் போவது நல்லது என்ற என் வார்த்தைகளை அந்த PWD அலுவலர் ஏற்கவில்லை.
அதெல்லாம் “சமாளிச்சிக்கலாம் சார்” என்றவருக்கு அதுதான் முதல் தேர்தல் பணியாம்.
“சார் polling station -------க்கு Presiding officer வரவில்லை” என்ற குரல் என் காதில் தேனாகப் பாய்ந்தது.(Naan அம்மா கவனிக்க)
என்னுடன் reserve duty யில் 10 நபர்கள் இருந்தனர். எல்லோரும் காது கேட்காத மாதிரி நழவினர்.
நான் தயங்காமல் எனக்குப் போடச் சொல்லி திருத்திய ஆணை போட்டு வாங்கிக் கொண்டேன். மற்றவர்கள் என் முதுகிற்குப் பின்னால் நக்கலாகச் சிரிப்பதை உணர முடிந்தது.
ஆணை வாங்கும் போது பிறபகல் மணி 3.00.
என் குழு உறுப்பினர்கள் எல்லோரையும் சந்தித்து குறு வட்ட அலுவலரிடம் (Zonal officer) SIM card வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
பொன்னேரியிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள சிற்றூர். ஷேர் ஆட்டோ பிடித்து வசதியாக வந்து சேர்ந்தேன்.
அது என்ன SIM card என்றால் வாக்குச் சாவடி தலைமை அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளத் தரப்படும் அரவான் SIM. வாக்குப் பதிவு இயந்திரம் இன்ன பிற சாதனங்களை ஒப்படைத்ததும் மரித்துவிடும் அந்த SIM card.
தேர்தல் நடைபெறும் போது கட்டுப்பாட்டு அறையுடன் அனைத்து விபரங்களையும் பரிமாற இந்த சிம் தான்.
……..தொடரும்
No comments:
Post a Comment