ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி (5)
நல்ல சாவடியில் பணியாற்றிய திருப்தி இருந்தது. இதுவரை கிட்டத்தட்ட பத்து தேர்தல்களில் நான் பணியாற்றிய எல்லா சாவடிகளும் பதட்டமான சாவடி பட்டியலில் இருந்தபோதிலும் ஒருபிரச்சனையும் வந்தது இல்லை.
மாலை வாக்குப் பதிவு முடிந்த பின் இயந்திரங்களைப் பிரித்து
(detaching of control and Ballot unit) இனி யாரும் வாக்குப் பதிவு செய்ய வழி இல்லை என்பதை close பொத்தானை அழுத்திய பின் முகவர்களுக்குக் காட்டுதல் மிக அவசியம்.
மாலை வாக்குப் பதிவு முடிந்த பின் இயந்திரங்களைப் பிரித்து
(detaching of control and Ballot unit) இனி யாரும் வாக்குப் பதிவு செய்ய வழி இல்லை என்பதை close பொத்தானை அழுத்திய பின் முகவர்களுக்குக் காட்டுதல் மிக அவசியம்.
இயந்திரங்களை மூடி முத்திரை இட்டு பாதுகாப்பாக வைத்து விட்டு, வாக்காளர் பட்டியலை சரிக்கட்ட வேண்டும். அதை PO1 மற்றும் PO2 செய்யும் போதே முகவர்களுக்கு வாக்குச் சீட்டுக் கணக்கு(Ballot paper account) தயார் செய்து வைக்கலாம். அதேமாதிரி வாக்குச் சாவடி தலைமைத் தேர்தல் அலுவரின் குறிப்பேட்டை(Presiding officer’s diary) யும் முடித்து விடலாம்.
அப்புறம் ஏறக்கட்டுதல்.
இதில் சட்டமுறைமைக்கான உறை(Statutory Cover),
சட்ட முறைமையற்ற உறை(Non Statutory Cover), இதர ஆவண உறை மற்றும் பிற வன் பொருட்கள் சிப்பம் கட்டுதல் முடிந்தால் 90% தேர்தல் பணி முடிந்த மாதிரி.
அப்புறம் ஏறக்கட்டுதல்.
இதில் சட்டமுறைமைக்கான உறை(Statutory Cover),
சட்ட முறைமையற்ற உறை(Non Statutory Cover), இதர ஆவண உறை மற்றும் பிற வன் பொருட்கள் சிப்பம் கட்டுதல் முடிந்தால் 90% தேர்தல் பணி முடிந்த மாதிரி.
எல்லாம் முடிந்த போது மாலை 7.30 மணி. எல்லாம் நல்லபடியாக முடிக்க உதவிய முகவர்கள், ஊர் பிரமுகர்கள், என் குழுப் பணியாளர்களுடன் கைகுலுக்கி என் நன்றியைத் தெரிவித்தேன். அடுத்தது பள்ளி நிர்வாகி இரவு உணவு அளித்தார். எதாவது குறை, வசதிக் குறைவு இருந்தால் சுட்டிக்காட்டக் கூறினார். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பதே உண்மை.
இரவு 10 மணி வரை குறுவட்ட அலுவலர்கள் வராத நிலையில் வடநாட்டு இயந்திரத் துப்பாக்கிக் காவலர்கள் என்னை அறையைப் பூட்டிக் கொண்டு உறங்கச் சொல்லி காவல் இருந்தனர். அவர்கள் பேசிய இந்தி எங்கள் யாருக்கும் தெரியாது. நாங்கள் பேசிய தமிழ் அவர்களுக்குப் புரியாது. இருப்பினும் ஏதோ ஒரு அன்பும் பாசமும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலி பிணைத்திருப்பதே நம் இந்தியாவின் சிறப்பு. அந்த இரண்டு நாட்களில் சாப்,மேம் என்று அப்படி ஒட்டிக் கொண்டனர்.
நள்ளிரவு 1.30 (14.04.2011) வாக்கில் Zonal officer மற்றும் Mobile force வந்து ஆவணங்களைச் சரிபார்த்து வாங்கிக் கொண்டனர்.
எங்களுக்கு தரப்பட்ட உழைப்பூதியத் தொகையை பிற தேர்தல் அலுவலர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். நன்றி கூறினேன்.
காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இன்னும் பாக்கியுள்ள இரண்டு உட்புற கிராம வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர்.
அதில் முதல் சாவடியில் “சாாாார்” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்ப நம்ம PWD சார்.
“சார் நீங்க சொன்னது நேற்று புரியவில்லை. இன்னிக்கு புரிந்து விட்டது” என்றார். 13.04.2011 அதிகாலை 2 மணிக்கு அவரை அந்த சாவடியில் தலைமை அலுவலராக விட்டுச் சென்றனராம். தலையும் காலும் புரியவில்லையாம்.அவஸ்தைப்பட்டு எல்லாம் தயார் பண்ண போறும் போறுமென்று ஆகிவிட்டது. தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் சார். இத்தனை ஆவணங்களை ஒரு நாளில் தயார் செய்வது ரொம்ப challenging job sir என்றார். இன்னும் சில ஆவணங்கள் முழுமையாக இல்லை என்றார். அப்புறம் அதை அரை மணி நேரத்தில் சரி செய்து கொடுத்தனர் எங்கள் PO கள். எல்லோரையும் போலீஸ் தச்சூர் கூட்டுச் சாலையில் விடும் போது மணி அதிகாலை நான்கு. நாலரை மணிக்கு திருப்பதியிலிருந்து கோயம்பேடு வரும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக வண்டியை நிறுத்தி ஏறி வீட்டை அடைந்த போது விடிந்திருந்தது.
முற்றும்.

No comments:
Post a Comment